Header Logo

மலையகம்
மரம் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Nov 9, 2025 - 10:51 AM -

0

மரம் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நேற்று (08) இரவு பெய்த கனமழையின் காரணமாக, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள வனராஜா பகுதியில் இன்று (09) காலை 08 மணியளவில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

முறிந்து வீழ்ந்த மரம் வீதியின் குறுக்கே விழுந்தமையினால், ஹட்டன் - மஸ்கெலியா மற்றும் ஹட்டன் - பொகவந்தலாவ வீதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. இதனால் குறித்த வீதியினூடாக பயணித்த பயணிகள் மற்றும் சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது. 

மேலும், முறிந்து வீழ்ந்த மரம் மின்சார கம்பத்தின் மீது விழுந்ததில் இரண்டு மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதிக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச மக்கள் முன்வந்து மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மக்கள் ஒன்றிணைந்து மரத்தை அகற்றியதன் பின்னர், குறித்த பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. 

சேதமடைந்த மின்சார கம்பங்களை சீர் செய்யும் நடவடிக்கையினை மின்சார சபையினர் மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!