Header Logo

உலகம்
காங்கோவில் சுரங்கத்தில் இடிந்து விழுந்த பாலம் - 32 பேர் உயிரிழப்பு

Nov 17, 2025 - 08:42 AM -

0

காங்கோவில் சுரங்கத்தில் இடிந்து விழுந்த பாலம் - 32 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தில் பாலம் ஒன்று கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர். 

கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் தொடர்பான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட இடத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

வெள்ளம் நிறைந்த பள்ளத்தை கடக்க அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் மீது சுரங்கத் தொழிலாளர்கள் அவசரமாக ஓடியதாலேயே அது இடிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் பாலத்தில் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

32 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 40-யை தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோபால்ட் கனிமத்தை சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் காங்கோ உற்பத்தி செய்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title