Header Logo
Mogo Academy

உலகம்
மதீனா பஸ் விபத்தில் 11 குழந்தைகள்- ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் பலி!

Nov 17, 2025 - 04:04 PM -

0

மதீனா பஸ் விபத்தில் 11 குழந்தைகள்- ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் பலி!
Mobitel inner

மதீனாவுக்கு அருகில் மெக்காவிலிருந்து உம்ரா புனிதப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் டேங்கர் லொறி மீது மோதிய விபத்தில், குழந்தைகள் உட்பட 45 இந்தியப் பயணிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 

இந்தக் கோர விபத்து சவுதி அரேபியாவின் மதீனாவுக்கு அருகில், அதிகாலை 1.30 மணியளவில் (இலங்கை நேரப்படி) முப்ரிஹத் பகுதியருகே இடம்பெற்றுள்ளது. 

ஆரம்பத்தில் 42 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் பொலிஸ் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் விபத்தில் 45 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். 

பேருந்தில் மொத்தம் 46 பயணிகள் இருந்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் இருந்து (பெரும்பாலும் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள்) உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் ஆவர். மெக்காவில் சடங்குகளை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது. 

பலியானவர்களில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் அடங்குவதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் இருப்பது பல குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

டீசல் டேங்கர் லொறி மீது பேருந்து மோதியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது பெரும்பாலான பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் தப்பிப்பது கடினமாகியுள்ளது. 

விபத்து நடந்த இடத்தில் உள்ளூர்வாசிகள் முதலில் வந்து மீட்புக் குழுவினருக்கு உதவியுள்ளனர். 

உயிர் பிழைத்த ஒரே நபரான, 24 வயதுடைய முஹம்மது அப்துல் ஷோயிப் என்பவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் சாரதிக்கு அருகில் அமர்ந்திருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ, ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தெலுங்கானா முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி, சம்பவம் குறித்து முழுமையான விபரங்களைப் பெற்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான நிவாரண உதவிகளை உடனடியாகச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara