Header Logo

விளையாட்டு
இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசினார் செனுரன் முத்துசாமி!

Nov 23, 2025 - 02:17 PM -

0

இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசினார் செனுரன் முத்துசாமி!

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ஓட்டங்களும் பவுமா 41 ஓட்டங்களும் பெற்றுக் கொடுத்தனர். 

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் பொறுப்புடன் விளையாடிய செனுரன் முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ஓட்டங்களை சேர்த்தது. 

நிதானமாக விளையாடிய செனுரன் முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய வெரெய்ன் 45 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து முத்துசாமி - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. 

சிறப்பாக விளையாடிய செனுரன் முத்துசாமி சதம் விளாசிய நிலையில் 109 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 8 விக்கெட்டுக்களை இழந்து 431 ஓட்டங்களை பெற்றுள்ளது.


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title