Nov 27, 2025 - 10:22 AM -
0
நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
இரண்டு வீடுகள் மண்சரிவில் சிக்கியதாலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக கண்டி மாவட்டத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்தார்.
உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட ஆகிய பகுதிகளிலிருந்தே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

