Header Logo

மலையகம்
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறப்பு!

Nov 27, 2025 - 01:15 PM -

0

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறப்பு!


கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் நீர் தேக்கத்திலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதனால் சென்கிளையார் நீர் வீழ்ச்சியில் நீர் சீறிப்பாய்கின்றன. 

கொத்மலை ஓயாவிற்கு கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதே வேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக டெவோன் சென்கிளையார் நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளது இதனால் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக அருகில் செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு பிரிவினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இதே வேளை நோட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான்கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றனர் இதனால் களனி கங்கையை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் நுவரெலியா வீதியில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து பிரதான வீதியில் வீழ்ந்துள்ளன. இதனால் அதிகமான இடங்களில் ஒரு வழி பாதையிலேயே வாகன போக்குவரத்து இடம்பெறுகின்றன. 

எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title