Header Logo

மலையகம்
மலையகத்தில் சீரற்ற காலநிலை!

Nov 27, 2025 - 03:15 PM -

0

மலையகத்தில் சீரற்ற காலநிலை!

மலையகத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள தொடர் லயன் குடியிருப்பின் பின்னால் இருந்த பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (27) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த குடியிருப்புக்குப் பின்னால் இருந்த மண்மேடு சரிந்து விழுந்ததில், மூன்று குடியிருப்புகளைச் சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் ஒரு பாரிய மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார். 

இதேவேளை காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு பகுதியில் உள்ள கிளை ஆற்றில் வெள்ள நீர் அடிக்கடி பெருக்கெடுக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், வாகனச் சாரதிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆற்றினை ஆழப்படுத்தித் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title