Header Logo

மலையகம்
மலையகத்தில் சீரற்ற காலநிலை!

Nov 27, 2025 - 03:15 PM -

0

மலையகத்தில் சீரற்ற காலநிலை!

மலையகத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள தொடர் லயன் குடியிருப்பின் பின்னால் இருந்த பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (27) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த குடியிருப்புக்குப் பின்னால் இருந்த மண்மேடு சரிந்து விழுந்ததில், மூன்று குடியிருப்புகளைச் சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் ஒரு பாரிய மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார். 

இதேவேளை காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு பகுதியில் உள்ள கிளை ஆற்றில் வெள்ள நீர் அடிக்கடி பெருக்கெடுக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், வாகனச் சாரதிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆற்றினை ஆழப்படுத்தித் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!