Nov 27, 2025 - 08:09 PM -
0
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டி தற்போது இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இடம்பெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kamil Mishara அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், Kusal Mendis 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Abrar Ahmed 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி பாகிஸ்தான் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

