Nov 28, 2025 - 06:41 PM -
0
மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.
மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விசேட அறிவிப்பு மூலம் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

