Nov 28, 2025 - 08:49 PM -
0
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 11 மாவட்டங்களில் உள்ள 91 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 3ஆம் கட்டத்தின் கீழ் வெளியேறும் அறிவிப்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள்:
பதுளை மாவட்டம்: மீகஹகிவுல, பதுளை, ஹாலிஎல, கந்தகெட்டிய, பசறை, ஊவா பரணகம, வெலிமடை, லுணுகல, எல்ல, பண்டாரவளை, சொரணாதோட்டம், ஹல்துமுல்லை.
கொழும்பு மாவட்டம்: பாதுக்க, சீதாவக்க.
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல.
களுத்துறை மாவட்டம்: புலத்சிங்கள, இங்கிரிய, ஹொரணை.
கண்டி மாவட்டம்: உடபலாத்த, கங்கவட்ட கோரளை, தொளுவ, மினிப்பே, பாத்தஹேவாஹெட்ட, மேததும்பற, தெல்தோட்டை, அக்குரணை, கங்க இஹல கோரளை, பாததும்பற, யட்டிநுவர, தும்பனே, உடுநுவர, ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, பஸ்பாகே கோரளை, பன்விலை, ஹதரலியத்த, குண்டசாலை.
கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, ரம்புக்கன, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, ருவன்வெல்ல, வரகாபொல, தெரணியகலை.
குருநாகல் மாவட்டம்: ரிதிகம, மாவதகம, மல்லவபிட்டிய, நாரம்மல, அளவ்வ.
மாத்தளை மாவட்டம்: நாவுல, ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, உக்குவலை, வில்கமுவ, யட்டவத்த, மாத்தளை, பல்லேபொல, லக்கல, பல்லேகம.
மொனராகலை மாவட்டம்: பிபில, மேதகம.
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை, ஹங்குராங்கெத்த, நீல்தண்டாஹின்ன, மதுரட்ட, நுவரெலியா, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, தலவாக்கலை, நோர்வுட்.
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, இரத்தினபுரி, எஹெலியகொடை, குருவிட்ட, கொலன்ன, எலபாத, அயகம, பலாங்கொடை, கலவான, இம்புல்பெ, கஹவத்தை, நிவித்திகல, ஒப்பநாயக்க, கொடகவெல, பெல்மதுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

