Dec 4, 2025 - 12:05 AM -
0
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக, குறைநிரப்பு மதிப்பீடு ஒன்று நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அனர்த்த நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு, அமைச்சரவையின் விசேட கூட்டமொன்றும் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
சபை முதல்வர் பிமல் ரத்னநாயக்கவினால் குறித்த குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

