Dec 11, 2025 - 09:18 AM -
0
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தாங்கிய அமெரிக்க விமானப் படையின் C-130J சூப்பர் ஹேர்குலிஸ் விமானம் மூலம் 'அத தெரண' குழுவினர் வடக்கு நோக்கிப் புறப்பட்டனர்.
குறித்த விமான யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்னும் சற்று நேரத்தில் சென்றடையவுள்ளது.
மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மனுசத் தெரண - டயலொக் நிவாரண நடவடிக்கை இன்றும் (11) 14வது நாளாகத் தொடர்கிறது.
இந்நேரம் வரை நாட்டின் பல பகுதிகளை உள்ளடக்கி உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வட மாகாணத்தில் இதுவரை செல்வதற்கு கடினமாக இருந்த இடங்களுக்கு மனுசத் தெரண நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டு இந்தச் சிறப்பு அமெரிக்க விமானம் புறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், தூதரகங்கள் மற்றும் காருண்யம் மிக்க மக்களால் மனுசத் தெரணவிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் இன்று வடக்கின் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

