Dec 23, 2025 - 03:21 PM -
0
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று தென்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த நெடுநாள் மீன்பிடிப் படகு கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட அந்தப் படகு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக, அதனை கரைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

