செய்திகள்
ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

Dec 27, 2025 - 04:18 PM -

0

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது அவரிடமிருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05