Header Logo

உலகம்
சீன - தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையே முக்கிய சந்திப்பு!

Jan 5, 2026 - 07:49 AM -

0

சீன - தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையே முக்கிய சந்திப்பு!

தென் கொரியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவுடனான விரிசல் அடைந்த உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இன்று (5) சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி இன்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பிராந்திய பாதுகாப்பு மற்றும் கொரிய பொப் கலாச்சாரம் மீதான சீனாவின் அதிகாரப்பூர்வமற்ற தடை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

கடந்த நவம்பரில் சீ ஜின்பிங் தென் கொரியாவிற்கு விஜயம் செய்த பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். 

தென்கொரியாவுக்கு சீனா ஒரு முக்கியமான பொருளாதார பங்காளியாக இருப்பதால், பிராந்தியத்தில் அரசியல் பதற்றங்கள் ஏற்படும் போது, சீனா தனது பொருளாதார உறவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தாது என்பதற்கான உறுதியை லீ ஜே மியுங் எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

கடந்த சில வாரங்களாக, சீனா மற்றும் ஜப்பான் இடையே தாய்வான் விவகாரத்தில் ராஜதந்திர மோதல் நிலவி வருகிறது. 

இது பிராந்தியத்தின் முக்கிய சக்தியான தென் கொரியாவை சங்கடமான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. 

தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் தனது தற்காப்புப் படையின் மூலம் பதிலடி கொடுக்கும் என்று அந்த நாட்டு பிரதமர் தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு எதிரான தனது கண்டனங்களை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. 

ஜப்பானைப் போலவே, தென் கொரியாவும் அமெரிக்காவின் நட்பு நாடாகும். 

அமெரிக்கா தாய்வானுக்கு ஆதரவளிப்பதோடு, அதன் பாதுகாப்பிற்காக ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. 

இத்தகைய சூழலில் லீயின் இந்த சீனப் பயணம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title