Header Logo

மலையகம்
வெள்ளத்தால் மலைபோல் குவிந்து கிடக்கும் மணல்!

Jan 7, 2026 - 09:50 AM -

0

வெள்ளத்தால் மலைபோல் குவிந்து கிடக்கும் மணல்!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கொத்மலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தில் பாரியளவில் சேறு மற்றும் மணல் மலைபோல் குவிந்து கிடக்கிறது எனத் தெரிவிக்கின்றனர். 

கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட மோசமான காலநிலை தாக்கத்தினால் ஏற்ப்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. இவ்வாறு நிரம்பியுள்ள மணலை அபிவிருத்தி பணிகளுக்கென பயன்படுத்த முடியுமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் மண்சரிவினால் ரம்பொடகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெக்கோ இயந்திரம், இரண்டு லொறிகள், ஒரு வேன், மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன காணாமல் போயுள்ளன, இதுவரை அதன் சிறு பாகங்களைக் கூட கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது எனவும் குறித்த வாகனங்கள் அனைத்தும் நீரின் அடித்துச் சென்று நீர்த்தேக்கத்தில் அடியில் புதைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. எனவே மலைப்போல் குவிந்து இருக்கும் மண் கலந்த மணல்களை அகற்றினால் மாத்திரம் காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றன.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title