Jan 7, 2026 - 10:45 AM -
0
விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜனவரி 9 ஆம் திகதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது.
சென்சார் போர்டுக்கு படம் அனுப்பப்பட்டு பல வாரங்கள் ஆகியும், சொன்ன மாற்றங்கள் அனைத்தையும் செய்த பிறகும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கேவிஎன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
அவசர வழக்காக இது விசாரிக்கப்படுகிறது. ஜன நாயகன் படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருக்கிறது என சென்சார் போர்டு கூறுவதாக தயாரிப்பாளர் மனுவில் தெரிவித்து இருக்கிறார். அதனால் அது பற்றிய விவரத்தை தாக்கல் செய்ய சென்சார் போர்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும் இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைத்து இருக்கிறது நீதிமன்றம்.

