Header Logo

வடக்கு
மன்னார் வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம்!

Jan 10, 2026 - 10:03 AM -

0

மன்னார் வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் (Neuro Surgery Clinic) நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதுவரை காலமும் நரம்பியல் சத்திரசிகிச்சை மற்றும் அது சார்ந்த நீண்டகால நோய்களினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளர்கள், சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். இதனால் அவர்கள் பல்வேறு போக்குவரத்து மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர். 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம். ஆஸாத்தின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணரின் நேரடிப் பங்களிப்புடன் இச்சேவை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியினால் இந்த விசேட கிளினிக் வைபவ ரீதியாக நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம். ஆஸாத், நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம். பிரியதர்ஷன், சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எஸ். தர்ஷன் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

மாதந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விசேட கிளினிக் சேவையினை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் எம்.எச்.எம். ஆஸாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

--

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title