பல்சுவை
பெற்றோரை கைவிடும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும்

Jan 13, 2026 - 06:09 PM -

0

பெற்றோரை கைவிடும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும்

பெற்​றோரை கைவிட்​டால் மாநில அரசு ஊழியர்​களின் சம்பளத்​தில் 10 முதல் 15 சதவீதம் வரை அறவிட்டு, அது அவர்​களின் பெற்​றோருக்கு வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும் என இந்தியாவின் தெலங்​கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்​துள்​ளார். 

ஹைத​ரா​பாத் பிரஜா பவனில் நேற்று (12) ‘பால பரோ​சா’ மற்​றும் ‘பிரணய் டே கேர்’ எனும் இரு புதிய திட்​டங்​களை தெலங்​கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் மாற்றுத் திற​னாளி​களுக்கு 50 கோடி ரூபா மதிப்​புள்ள உபகரணங்​களை வழங்​கி​னார். 

இதன் போது கருத்து தெரிவித்த அவர், 

பிரணய் திட்​டம் மூலம் முதி​யோரை நல்ல வழி​யில் பாது​காக்க இந்த அரசு தீர்​மானித்​துள்​ளது. இதனால் இனி பெற்​றோரை ஒதுக்கி வைத்​தாலோ, அனாதை இல்​லங்​களில் சேர்த்​தாலோ, கைவிட்​டாலோ அரசு ஊழியர்​களின் சம்பளத்​தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை மாதா​மாதம் அறவிட்டு, அப்​பணத்தை கைவிடப்​பட்ட பெற்​றோருக்கு வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும். பெற்​றோரை கைவிடு​பவர்​களை நாம் தான் வழிக்கு கொண்டு வர வேண்​டும். பெற்​றோருக்கு உபயோகப்​படா விட்​டால், அவர்​கள் இந்த சமூகத்​துக்கு எப்​படி உபயோகப்​படு​வார்​கள் என தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05