Header Logo

வடக்கு
இந்நாட்டுக்கு வழி பிறப்பதையும் அந்த அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்த முடியாது!

Jan 16, 2026 - 11:34 AM -

0

இந்நாட்டுக்கு வழி பிறப்பதையும் அந்த அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்த முடியாது!

யாழ்ப்பாணம், வேலனை மற்றும் மானிப்பாய் பகுதிகளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பங்கேற்புடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, 

இலங்கையில் டித்வா புயலால் 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிலர் காணாமல் போனார்கள். அதுமட்டுமல்ல முழு நாடும் ஸ்தம்பிதமடைந்தது. 

பொருளாதார ரீதியில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இவ்வாறு பேரழிவு ஏற்பட்டிருந்த நிலையிலும் சிலர் அரசியல் நடத்துவதற்கே முற்பட்டனர். 

இலங்கையால் இனி மீண்டெழ முடியாது, இந்த அரசாங்கத்தால் அப்பணியை செய்ய முடியாது என கோஷம் எழுப்பினர். 

அரசாங்க இயந்திரம்கூட மந்த கதியிலேயே இயங்குகின்றது. எனவே , மீண்டெழுவது சாத்தியமில்லாத விடயம் எனவும் கருத்துகளை பரப்பினர். 

ஆனால் எமது நாட்டு அரசாங்க ஊழியர்களும், மக்களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தனர். 

முழு நாடும் ஒன்றிணைந்து உதவி திட்டங்களை முன்னெடுத்தது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நேசக்கரம் நீட்டினார்கள். உலக நாடுகளும் துணை நின்றன. 

தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பார்கள், அதற்காகவே நாம் பிரார்த்திக்கின்றோம். ஆனால் தை பிறந்தாலும் மக்களுக்கு வழி பிறக்கக்கூடாது என சில அரசியல்வாதிகள் சிந்திக்கின்றனர். 

எது எப்படி இருந்தாலும் தை பிறப்பதையும், இந்நாட்டுக்கு வழி பிறப்பதையும் அந்த அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களின் சூழ்சிகள் எல்லாம் தோற்கடிக்கப்படும். 

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒன்றிணையும் பட்சத்திலேயே மீட்சி என்பது சாத்தியம். பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது என அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

title