செய்திகள்
இஸ்ரேலில் கைதான 43 வயது இலங்கையர்

Jan 20, 2026 - 11:24 PM -

0

இஸ்ரேலில் கைதான 43 வயது இலங்கையர்

ஜோர்டான் எல்லை ஊடாக சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை ஒருவர் இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை மற்றும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட ஒருவரை சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு எதிராக சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் பொலிஸாரின் சர்வதேச பிரிவான இன்டர்போல் கிளை தெரிவித்துள்ளது. 

2023 செப்டம்பர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னர், எகிப்து, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே செயற்பட்ட மனித கடத்தல் வலையமைப்புகள் ஊடாக பெருமளவிலான இலங்கையர்கள் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அதன் பின்னர் எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதையடுத்து, அந்த மனித கடத்தல் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரசாங்க மற்றும் தனியார் துறைகள் ஊடாக இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மனித கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக அந்நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பது மிகவும் அவதானமிக்கதுடன் உயிருக்கு அச்சுறுத்தலான செயலாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக போர்ச் சூழல் நிலவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில், பாலைவனப் பகுதிகள் ஊடாக எல்லைகளைச் சட்டவிரோதமாகக் கடப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், மனித கடத்தல்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், இவ்வாறான சட்டவிரோதப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05