Jan 22, 2026 - 08:29 PM -
0
அஹங்கம, பெலஸ்ஸ பகுதியில் மதில் ஒன்று இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளில் சிக்கி மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேலைத்தளம் ஒன்றில் மதில் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களே இவ்வாறு இடிபாடுகளுக்குள் சிக்கியதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
சுவருக்கு அடியில் சிக்கியிருந்த மூவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொன்னகஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

