Header Logo

விளையாட்டு
ருத்ர தாண்டவமாடிய இஷான் கிஷன், சூர்யகுமார்! 2வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

Jan 24, 2026 - 07:00 AM -

0

ருத்ர தாண்டவமாடிய இஷான் கிஷன், சூர்யகுமார்! 2வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்துடுப்பில் ஈடுபட தீர்மானித்து. 

அதன்படி, முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் மிட்செல் செண்ட்னர் 47 ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 44 ஓட்டங்களும் பெற்றனர். 

இதையடுத்து, 209 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 15.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 82 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இதன்படி 05 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.


MOST READ

காணொளி
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

title