Jan 27, 2026 - 09:34 AM -
0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்து வருகிறார்.
இந்நிலையில், தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென் கொரியா தாமதப்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.
வரி அதிகரிப்பு குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றும், வொஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடம் இதுகுறித்து பேசுவோம் என தென் கொரியா தெரிவித்துள்ளது.

