Feb 2, 2026 - 09:45 AM -
0
ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் நேற்று (01) யாழ்ப்பாணத்துக்கு வாகன பேரணியாக எடுத்து வரப்பட்டது.
இலங்கையின் பல்வேறு நகரங்களுக்களுக்கும் உலகக் கிண்ணம், எடுத்துச் செல்லப்பட்டுவரும் நிலையில், நேற்று வடக்குக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று பிற்பகலில் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நல்லூர் ஆலய முன்றலில் வெற்றிக் எடுத்துவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கிலும், அதனைத்தொடர்ந்து யாழ்.கோட்டையிலும், அதனைத் தொடர்ந்து யாழ். பொது நூலகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டன.
--

