Feb 4, 2026 - 02:55 PM -
0
இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு மயூராபதி ஆலயத்தில் அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
"இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் புத்த சாசன சமய அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சுடன் இணைந்த இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமய திணைக்கள பணிப்பாளர் நாயகம் யதுர் லசிம் அனுருதன் மற்றும் இந்து குழுவினர் கலந்துகொண்டனர்.
--

