Feb 4, 2026 - 03:48 PM -
0
இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக மஞ்சுள சில்வா தலைமையில் புத்தளத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டிலும் புத்தளத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான கயான் ஜானக பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஹம்மட் பைஸல், அஜித் கிஹான், புத்தளம் நகர முதல்வர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
--

