Feb 5, 2026 - 10:48 AM -
0
கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் நேற்று (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார், முதற்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
நீதிமன்ற அனுமதியுடன் கைக்குண்டை அங்கிருந்து அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
--

