செய்திகள்
பொது அவசரகால நிலை பிரகடனம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Feb 6, 2026 - 06:59 PM -

0

பொது அவசரகால நிலை பிரகடனம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் மாத்திரமே அளிக்கப்பட்டன. 

இதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார். 

அதன்படி, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவர் மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05