Feb 9, 2026 - 09:47 PM -
0
யாழ் நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ் . போதனா வைத்தியசாலையின் பின்புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை நேற்றைய தினம் (09) துப்பரவு செய்த வேளை , துப்பரவு பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றினை அவதானித்துள்ளனர்.
அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பொதி தொடர்பில் சோதனையிட்டனர்.
அதனுள் கையெறிகுண்டு , கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன.
பொதியினுள் உள்ள வெடிபொருட்கள் தொடர்பில் யாழ் நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் , நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் , அதன் பின்னரே மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்னர்.
இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக்குளத்தின் வான் பாயும் அணைக்கட்டு பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

