சினிமா
பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல்!

Feb 11, 2026 - 03:11 PM -

0

பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல்!

சமீபத்தில் ஹிந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அது தொடர்பாக ஐந்து பேரை பிடித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்நோய் தொடர்புடையவர்கள் இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வந்திருக்கும் மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் என நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸப்பில் மிரட்டல் வந்திருக்கிறது. அதனால் அவருக்கு பொலிஸார் தற்போது தீவிர பாதுகாப்பை அளித்து வருகின்றனர். அந்த வாய்ஸ் நோட் அனுப்பியது யார் எனவும் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் வசிக்கும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05