Feb 11, 2026 - 06:14 PM -
0
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது சிறையில் உள்ள தீகல சமன் எனப்படும் அஜித் பெரேரா என்பவரின் சொகுசு வீடொன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.
2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குறித்த வீடு, அவிசாவளை, தெஹியோவிட்ட பகுதியில் அமைந்துள்ளது.
அந்த வீட்டை அவர் தனது கள்ளக்காதலிக்கு கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரால் அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக பணம் பெற்ற வழியை தெளிவுபடுத்த முடியாமல் போனதால், அது போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனவே குறித்த வீட்டை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.

