செய்திகள்
நீர் விபத்துக்களால் இவ்வருடம் 24 பேர் உயிரிழப்பு

Feb 12, 2026 - 08:49 AM -

0

நீர் விபத்துக்களால் இவ்வருடம் 24 பேர் உயிரிழப்பு

நீர் விபத்துக்கள் காரணமாக இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவ்விபத்துக்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு உயிர்காக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.

 

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05