Feb 12, 2026 - 04:46 PM -
0
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தான் பெரிய சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். சோலோ ஹீரோயினாகவும் அவர் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவர் மூக்குத்தி அம்மன் 2, யாஷ் உடன் டாக்சிக் போன்ற பல படங்களில் அவர் தற்போது நடித்து வருகிறார். அவர் கடைசியாக தெலுங்கில் Mana Shankara Vara Prasad Garu படத்தில் நடித்து இருந்தார்.
அந்த படத்திற்காக சுமார் 10 கோடி ரூபாயை நயன்தாரா வாங்கியதாக செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தனுஷுடன் D55 படத்தில் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் ஸ்ரீலீலாவும் நடிக்கிறார்.
இந்த படத்திற்காக சாய் பல்லவிக்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக தகவல் கசிந்து இருக்கிறது. கடந்த படத்தில் 10 கோடி வாங்கிய நயன்தாராவை சாய் பல்லவி தற்போது முந்தி இருக்கிறார்.

