Feb 13, 2026 - 10:20 PM -
0
இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணியுடன் 41 பேர் கொண்ட குழு, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 12 அதிகாரிகள் இவ்வாறு வருகை தந்துள்ளதாக 'அத தெரண' விமான நிலையச் செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி திட்டமிட்டபடி பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

