Feb 13, 2026 - 11:07 PM -
0
திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது, நாட்டில் திட்டமிட்ட ரீதியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று (13) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"இந்த நாட்டின் மீது திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும் கலாசாரத் தாக்குதலைக் கண்டிப்பதற்காகவே நாம் இதில் தலையிட்டோம். திருகோணமலைச் சம்பவம் என்பது அதில் ஒன்று மாத்திரமே. உண்மையில் இதனை விடவும் பாரதூரமான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நாட்டில் வேண்டுமென்றே ஒரு பதற்ற நிலையை உருவாக்கவும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் அரசாங்கம் பயன்படுத்தும் ஒரு கருவியே இதுவாகும். இது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது." என்றார்.

