Feb 15, 2026 - 12:44 PM -
0
உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேபாளம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (15) இடம்பெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இன்று முற்பகல் 11 மணிக்கு மும்பையில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
நேபாளம் அணி சார்பில் திபெந்திர சிங் ஐரி அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாடவுள்ளது.

