விளையாட்டு
நேபாளத்தை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய தீவுகள்

Feb 15, 2026 - 04:28 PM -

0

நேபாளத்தை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய தீவுகள்

2026 இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 'C' குழுவிலிருந்து சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணி இன்று (15) தகுதி பெற்றுள்ளது. 

மும்பையில் நடைபெற்ற போட்டியில் நேபாள அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தியதன் மூலம் இந்த தகுதியை அந்த அணி பெற்றுள்ளது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. 

இதற்குப் பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 

அதேவேளை, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்த நேபாள அணி உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05