செய்திகள்
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

Feb 16, 2026 - 07:36 AM -

0

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ளது. 

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

நாளை (17) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக உரிய நிலையங்களுக்கு பரீட்சார்த்திகள் வருகை தர வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். 

எவ்வாறாயினும், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் மனதை இலகுவாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியரு சந்திரதாச தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05