Header Logo

விளையாட்டு
சிம்பாப்வே - அயர்லாந்து போட்டி மழையால் தாமதம்!

Feb 17, 2026 - 04:21 PM -

0

சிம்பாப்வே - அயர்லாந்து போட்டி மழையால் தாமதம்!

டி20 உலகக் கிண்ணத்தில் 'B' பிரிவில் இலங்கை, அவுஸ்திரேலியா, சிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னெறியுள்ளது. 

சிம்பாப்வே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிம்பாப்வேயிடம் அவுஸ்திரேலியா தோல்வியடைந்ததால் 3 போட்டிகளில் 2 இல் தோல்வியை சந்தித்துள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டியில் ஓமனுடன் மோதவுள்ளது. 

இந்நிலையில் இன்று (17) மதியம் சிம்பாப்வே - அயர்லாந்து இடையிலான போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலேயில் நடைபெற இருந்தது. இந்த போட்டி மழையினால் இன்னும் ஆரம்பமாகவில்லை. 

இந்த போட்டியில் சிம்பாப்வே தோல்வியடைந்தால்தான் அவுஸ்திரேலியாவுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற சிறிய அளவில் வாய்ப்பு. அடுத்த போட்டியில் இலங்கையிடம் சிம்பாப்வே தோல்வியடைய வேண்டும். 

ஆனால் தற்போது மழை பெய்து வரும் நிலையில் போட்டி இரத்து செய்யப்பட்டால் ஜிம்பாப்வே ஒரு புள்ளி பெற்று, இரண்டு வெற்றி, ஒரு முடிவு இல்லை என்பதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும். அவுஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title