செய்திகள்
பணி இடைநீக்கத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற சமிந்த குலரத்ன!

Feb 18, 2026 - 04:38 PM -

0

பணி இடைநீக்கத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற சமிந்த குலரத்ன!

முறையான விசாரணை எதுவுமின்றி தன்னை கடமையிலிருந்து இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.


இந்த ரிட் மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட 14 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.


சிரேஷ்ட சட்டத்தரணி ஜீ.கே.ஏ. சமிந்த குமார குலரத்னவின் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, கடந்த ஜனவரி 23 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


அவர் 2023 செப்டம்பர் 15 முதல் இந்த பதவியில் கடமையாற்றி வந்தார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05