Header Logo

விளையாட்டு
அரசன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?

Feb 18, 2026 - 06:51 PM -

0

அரசன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று முடிந்தது. 

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்திலிருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருந்த விஜய் சேதுபதி திடீரென விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்காதது, தன்னால் கொடுக்கப்பட்ட கால்ஷீட் வீணானது போன்ற காரணங்களால் இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக கூறப்படுகிறது. 

விஜய் சேதுபதி விலகியுள்ள நிலையில், அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், விஜய் சேதுபதி அரசன் படத்திலிருந்து விலகியதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை என படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் விஜய் சேதுபதி அரசன் படத்திலிருந்து வெளியேறவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title