Feb 18, 2026 - 07:19 PM -
0
டி20 உலகக் கிண்ண தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (18) நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.
முதலாவது ஓவரை நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத் வீசினார். அந்த ஓவரில் 3 ஆவது பந்தில் அபிஷேக் சர்மா கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் டி20 உலகக் கிண்ண தொடரில் தொடர்ந்து 3 ஆவது முறையாக அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறி உள்ளார். அமெரிக்காவுடன் முதல் பந்திலும் பாகிஸ்தானுடன் 4 ஆவது பந்திலும் ஆட்டமிழந்தார். நமீபியாவுடன் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

