Feb 19, 2026 - 05:27 PM -
0
கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மற்றும் கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புனர்க்கு, கலன் செயற்படுத்தத்தப்படாப் பொதுக் காவுனர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியிருப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
1972ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புனர்க்கு, கலன் செயற்படுத்ததப்படாப் பொதுக் காவுனர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்களுக்கு உரிமைமளித்தல் சட்டம் இதன்மூலம் திருத்தப்படுகின்றது.
இதற்கு அமைய, இதுவரை விசேட துறையாகக் கருதப்படும் கொள்கலம் செயற்படுத்துநர்கள் அச்சட்டவாக்கத்தின் ஏற்பாாடுகளின் ஏற்புடமையிலிருந்து நீக்கப்பட்டு, கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படுவர். எஞ்சிய கப்பல் சேவை வழங்குனர்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் ஒழுங்குறுத்தப்படுவர்.
கொள்கலன் செயற்படுத்துனர்களினதும் தற்போதைய உரிமங்களும், பரிசீலிக்கப்படும் விண்ணப்பங்களும் தானாகவே புதிய கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படுவதுடன், இத்துறையின் செயற்பாடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் தொடர்ச்சி உறுதிசெய்யப்படும்.
இதற்கு அமைய 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 05ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புனர்க்கு, கலன் செயற்படுத்தத்தப்படாப் பொதுக் காவுனர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
அத்துடன், 05.02.2026 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம், இலங்கையில் கொள்கலன் தொழிற்படுத்துநர்களின் வணிகங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை வழங்குகின்றது.
அவ்வாறான வணிகளில் ஈடுபடும் எந்தவொரு நபரும் வணிக கப்பல் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் செல்லுபடியாகும் உரிமைப்பத்திரத்தை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கின்றது.
இது 2026ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

