செய்திகள்
மீனகயா கடுகதி ரயிலின் பயணம் மீண்டும் ஆரம்பம்

Feb 23, 2026 - 01:54 PM -

0

மீனகயா கடுகதி ரயிலின் பயணம் மீண்டும் ஆரம்பம்

'மீனகயா' இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, அந்த ரயில் இன்று இரவு 07.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 

இந்த ரயில், ஆசன முன்பதிவு வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு பெட்டியொன்றையும், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட இரண்டு பெட்டிகளையும் கொண்டுள்ளது. 

https://seatreservation.railway.gov.lk என்ற இணையத்தள இணைப்பின் ஊடாக ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்றும் இந்த ரயிலுக்கான ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05