Feb 24, 2026 - 09:28 AM -
0
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில் நேற்று (23) மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யாராவது தமது காட்டினை சுத்தம் செய்யும்போது குறித்த குண்டு அங்கு காணப்பட்டதால் இவ்வாறு கொண்டுவந்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவை பெற்றபின் குறித்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

