Feb 24, 2026 - 09:27 PM -
0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைவாக, அரசியலமைப்பின் 154ஆ வது சரத்தின் பிரகாரம் 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகை மற்றும் சமூக ஊடக அரச உப குழுவின் பிரதித் தலைவராகச் சேவையாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைத் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் கடமையாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.

