Feb 25, 2026 - 12:58 PM -
0
டி20 உலகக் கிண்ண தொடரின் 45 ஆவது 'சுப்பர் 8' போட்டியின் இலங்கையின் பல்லேகல மைதானத்தில் நேற்று (24) நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ஓட்டங்களை பெற்றது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ஓட்டங்களை பெற்றார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்து 100 ஓட்டங்களில் அவுட்டானார்.
இந்நிலையில், டி20 உலகக் கிண்ணத்தில் சதம் அடித்த முதல் அணிதலைவர் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 98 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

