செய்திகள்
பேருந்தில் ஹெரோயின் கடத்திய ஒருவர் கைது

Feb 26, 2026 - 04:20 PM -

0

பேருந்தில் ஹெரோயின் கடத்திய ஒருவர் கைது

கொழும்பில் இருந்து அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, சந்தேகநபரை இன்று (26) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தனியார் பேருந்து ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் அம்பாறை பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் போது, முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைதானவர் கொழும்பு பாலத்துறை பகுதியில் இருந்து ஹெரோயினை பெற்றுள்ளதுடன் அவர் நீண்ட காலமாக இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இதன்போது அவரிடமிருந்து 2677 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05