Feb 26, 2026 - 05:36 PM -
0
இலங்கையின் தனியார் துறை வங்கியியல் துறையின் முன்னோடியும் முன்மாதிரியுமான HNB, அதன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலைலயத்தை இல. 111, ஹொரண வீதி, பண்டாரகம எனும் புதிய முகவரியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்ததன் மூலம், தனது நீண்டகாலத் துறைசார் தலைமைத்துவத்தில் மற்றுமொரு மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது.
HNBஇன் நிறைவேற்றுத் துணைத் தலைவரும் கிளை வலையமைப்பு வணிகப் பிரதானியுமான சுபுன் டயஸ், பண்டாரகம பிரதேச செயலாளர் திஸ்னா ஜயசிங்க மற்றும் HNBஇன் தென்மேற்கு பிராந்திய வணிகப் பிரதானி ஈஷான் ஜயரத்ன ஆகியோருடன் வங்கியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எனப் பலரும் இந்தத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு. சுபுன் டயஸ், சமூகத்துடனான வங்கியின் நீண்டகால உறவு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்: “எமது கிளை வலையமைப்பில், இலட்சியம், தொழில்முயற்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் மையமாக பண்டாரகம ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடமாற்றமானது, எமது வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒரு சூழலில் அவர்களுக்குச் சேவையாற்றவும், அவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளுக்கு வலுசேர்க்கும் வகையிலான உயர்தர வங்கியியல் தீர்வுகளை வழங்கவும் எமக்கு வழிவகுக்கிறது,” எனத் தெரிவித்தார். “வசதி, இணைப்பு மற்றும் அக்கறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வளாகத்தை அனுபவிக்குமாறு எமது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் ஏனைய பொதுமக்களுக்கும் நாம் அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்,” என கூறினார்.
விசாலமான மற்றும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வளாகம், விரைவான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வங்கி நிபுணர்களை இலகுவாக அணுகக்கூடிய வசதிகள் மூலம் வாடிக்கையாளர் சேவைகளை எளிதாக்குகின்றது. வங்கியியல் சிறந்து விளங்குவதற்கு வலுவான உறவுகளே மிக முக்கியம் என்ற HNBஇன் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களுடன் ஆழமான ஈடுபாட்டை ஏற்படுத்தும் விதத்தில் இந்த இட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

